Monday 10 December 2012

க.பொ.த(சா.த) பரீட்சை

542,260 மாணவர்கள் 4448 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று 11.12.2012 ம் திகதி பரீட்சை நடைபெறுகின்றது. அநுராதபுர மாவட்டம் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் அடையாளம் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றது

Wednesday 28 November 2012

அநுராதபுரம் சிறுபான்மைச் சமூகம்.



எல். வஸீம் அக்ரம்



அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 71 386 முஸ்லிம் மக்கள் வாழ்வதாக அண்மையில் செய்யப்பட்ட குடிசன மதிப்பீடு தெரிவிக்கின்றது. இது சுமார் 8.3 வீத சனத்தொகையாக கருதப்படுகின்றது. ,த்துடன் சுமார் 3391 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வாழ்கின்ற முஸ்லிம் இருப்பு, சமூக பொருளாதார அபிவிருத்திகள் இன்றைய கால கட்டத்தில் மிக ,ன்றியமையாத ஒன்றாக ,ருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களைவிட சமகாலத்தில் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செய்து அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்புக்ளை வகுத்துக் கொள்வது இன்றைய போராட்டமாகவே கொள்ள வேண்டும்.
அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் ,ருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் ,ருக்கின்றார்கள் என்ற ஆய்வு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 33 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 1000 - 2000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவதில்லை.
இப்பிரதேச சிறுபான்மைச் சமூகங்களின் ,ருப்பை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் இடம் பெற்றுள்ளதை வரலாற்றுத் தகவல்கள் சான்றுபடுத்தியுள்ளன.
அநுராதபுர மாவட்டத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மைச் சமூகத்துடன் சமூக பொருளாதார கல்வி விடயங்களில் ,னக்கத்துடனும் சகவாழ்வுடனும் ,ருந்துள்ளதனை அவதானிக்கலாம்.
,ந்த ,ருப்பை குலைக்கும் வண்ணம் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்கும் போது கவலையாக உள்ளது.
1. முஸ்லிம்களின் சமூகத்துள் நிலவுகின்ற நுண்தன்மையான பிரதேச முரண்பாடுகள்
2. முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவுகின்ற சமய அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள்.
 3. ஏனைய சமூகங்களின் ,னச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.
இவ்வாறான அடிப்படைக் காரணங்கள் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை மக்களின் இருப்பை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினையாக அல்லது சவாலாக அடையாளம் காணலாம். அநுராதபுரத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் பிரதேச பிரிவுகளால் தூர்ந்த நிலையில் வாழ்கின்றனர். அதாவது இவர்கள் குவியப் படுத்திய சமூக அமைப்பாக அன்றி பெரிய இடைவெளி மிக்க நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதானது, ,ந்த மக்களின் கலை இலக்கிய, கல்வி, சமூக, சமய, பொருளாதார, அரசியல் விடயங்களில் ஒருமைத்துவ நிலையை அடைவதில் தடையாக உள்ளது.
அநுராதபுர சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியானது சற்று ஆறுதல் அளிக்கும் வண்ணம் ,ருக்கின்றது. ,ருப்பினும் அதனூடான சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி வெளிப்பாடுகள் போதாமையைக் காட்டுவதாக சில அவதானங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு மேற்சொன்ன காரணங்கள் பின்னூட்டலாய் அமைகின்றன. எனவே எதிர்கால சமூகத்தின் நலன் கருதி அநுராதபுர சிறுபான்மைச் சமூகங்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உசிதமான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது எமது அவா.

Tuesday 13 November 2012

அடையாளம் பத்திரிகை புதிய மாற்றங்களுடன் விரைவில்............